Filed Under:  பி.எம்.கமால் பக்கம்

வீதிக்கு வாருங்கள் ! (பீ. எம் . கமால், கடையநல்லூர்)

20th May 2011   ·   2 Comments

பகிர்ந்து கொள்க

வீதிக்கு வாருங்கள் !
(பீ. எம் . கமால், கடையநல்லூர்)

கைத்தறித் தொழிலும்
காடிகூழ் உணவும்
கூடிய உறவும்
குடிகொண்டிருந்த
கடைய நல்லூரில்
வறுமை இருந்தது.
சிறுமை இல்லை !
பெருமை இருந்தது !
பேரிழப்பில்லை !
ஊர்நாட்டாண்மை
உச்சத்திலிருந்தது !
ஊர்க்கூட்டத்தில்
உதைகள் விழுந்தன !
கட்டுப்பாடுகள்
கைக்குள் இருந்தன !
வரவுக்குள்தான்
செலவுகள் இருந்தன !
வாரம் ஒருமுறை
கறிச் சோருண்டனர் !
உறவுகள் எல்லாம்
உயரத்தில் இருந்தன !
கவலைகள் மனதில்
காணாமல் போயின !
பெரியவர்களுக்குப்
பெண்கள் அடங்கி
பேசவும் தயங்கிப
பெருமை சேர்த்தனர் !
இன்றோ நிலைமை
தலைகீ ழானது !
கைத்தறிஎல்லாம்
பொய்த் தறியாகி
அரபகத்துப் பணத்தால்
அடக்கம் ஆனது !
ஆடையாக அலங்கரித்திருந்த
அடக்கம் இங்கே
அம்மணமானது !
பெண்கள் எல்லாம்
ஆண்களாகவும்
ஆண்கள் எல்லாம்
பெண்களாகவும்
மாறிப் போனதால்
மானக்கேடு மலிந்துபோனது !
எதையும்
தீர்மானிக்கும் ஆணினமின்று
திசைதெரியாமல் திணறுகின்றது !
பாலை மணலில்
வியர்வை சிந்தி
படுந்துன் பத்தை
பக்குவமாய் மறைத்து
உடலைச் சாறாய்ப்
பிழிந்து அனுப்பும்
பணமோ இங்கே
ஊர் சுற்றுகிறது !
உபயோகப் பொருட்கள்
உள்ளூரில் இருந்தாலும்
ஊருக்கு வெளியேதான்
உள்ளம் கவர்கிறது.
தாய்க் குலங்கள்
பேய்க் குலமாய்
தரமிறங்கிப் போனதினால்
வாய்க்கு வந்தபடியெல்லாம்
வசைபாட வைக்கின்றார் !
இதுவரையில்….
ஓடிப்போன பெண்கள்
உருப்படியாய் வாழ்ந்ததுண்டா ?
கண்டிக்கப் பெரியார்கள்
காலெடுத்து வைத்ததுண்டா ?
எக்கேடு கெட்டாலும்
எனக்கென்ன என்று
எல்லோரும் இருந்து விட்டால்
ஊரில்
மாமாப் பயல்களின்
மன்னராட்சி தொடங்கிவிடும் !
கடையநல்லூர் பெண்களை
அடைய நல்லூர் எனும்
அடைமொழி நம்மை
அவமானப் படுத்திவிடும் !
இளைஞர்களே ! நீங்கள்
எழுந்துமுன் வாருங்கள் !
பழைய தலைமுறையால்
பயனேதும் இல்லைஎன்று
புதிய தலைமுறையே !
புத்திளம் காளைகளே !
புறப்பட்டு வாருங்கள் !
ஆற்றலுடன் நீங்கள்
ஆர்ப்பரித்து எழுந்துவிட்டால்
மாற்றம் வந்துவிடும்
நமதூரின்
மகத்துவம் கூடிவிடும் !
உலமாக்கள் போதனையும்
ஊர்ப்பெரியோர் சொன்னவையும்
சாதிக்க முடியாத
சாதனையைச செய்வதற்கு
சத்திய இஸ்லாத்தின்
சாதனை இளைஞர் களே !
வீறுகொண்டெழுந்து
வீதிக்கு வாருங்கள் !

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (2)

  1. nallurnanban says:

    காலத்திற்கு ஏற்ற சமுதாய நோக்கமுள்ள கவிதை…எல்லோரும் உணரவேண்டும் .நிச்சயமாக மாற்றம் வரவேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்…

  2. SMAHAMED says:

    கவிதையின் நோக்கம் மிகவும் உயர்ந்தது .சத்திய இஸ்லாத்தின் இளைஞர்களே
    நமதூரின் மாற்றம் காண புறப்பட்டு வாருங்கள்.ஆசிரியரின் பணி தொடர வாழ்த்துக்கள்.


Comments are closed.

Log In

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை