Filed Under:  கவிதைகள்

வேண்டாம் நம் பிள்ளைக்கு

30th May 2012   ·   0 Comments

பகிர்ந்து கொள்க

சேர்ந்து வாழும் காலத்தில்
சோர்ந்துப் போய்
தனிமையில் நீயும் நானும்;
அங்கலாய்க்கும்
வயதின் கதறலை
வாய் மூடி விழிப்பிதிங்கி;
வழியனுப்புவிட்டேன்!

படுத்து உருள
பஞ்சு மெத்தையும்;
உடுத்தி மகிழ
பட்டுப்புடவையும்;
வாழ்ந்து மகிழ
வசதியாய் வீடும்
உனக்கு தந்து மகிழ்ந்தேன்!

தேவை எனும் தேடுதலுக்குப்
பாலையில் பலியாகி;
இப்போது;
கன்னம் குழியாகி;
முடியோ நரையாகி;
உன் முன்னே!

தேம்பி அழ
தெம்பில்லாமல்;
சாய்ந்துக் கொள்கிறேன்
உன் மேனியில்;
சபதம் கொண்டேன்
இனியொரு புலம்பல்
வேண்டாம் நம் பிள்ளைக்கு!

–யாசர் அரஃபாத்

பகிர்ந்து கொள்க

By

Readers Comments (0)


Comments are closed.

Login

பகுதிகள்

அதிகம் பகிர்ந்தவை