இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
1st February 2012 · 0 Comments
ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது . டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புகளுக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் வடே அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் அஸ்வின், வினய்குமார், ரெய்னா, சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது. அணியின் ஸ்கோர் 6 ஆக இருக்கும் போது 4 ரன்களில் ஷேவக் ஆட்டம் இழந்தார்.
அடுத்து அணியின் ஸ்கோர் 47 ஆக இருக்கும் போது காம்பிர் ஆட்டம் இழந்தார். ஸ்கோர் 53 ஆக இருக்கும் போது கோக்லி ஆட்டம் இழந்தார்.
81 ரன்களில் இந்தியா 6 விக்கெட்டை இழந்தது. பின்னர் கேப்டன் டோனியும், தமிழக வீரர் அஸ்வினும் நிலைத்து நின்று ஆடினர்.
20 ஓவர்களில் அவர்களால் 140 ரன்களுக்கு தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முடிந்தது. இதனால் இந்திய அணி 31 ரன்களில் தோல்வி அடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தானை வென்றது இந்தியா
- இளைஞர்களுக்கு வழிவிட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
- சவூதி அரேபியத் தூதுவர் பங்களாதேசில் சுட்டுக்கொலை!
By ASAN
Readers Comments (0)
Comments are closed.


