Filed Under:  இந்தியா

காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்

19th January 2012   ·   0 Comments

‘காஷ்மீரிகள் இந்தியாவில் இருந்து பிரிய விரும்புகிறார்கள்’ என்று ஒருமுறை பேசி இருந்தீர்களே… அவர்களின் கோரிக்கை ஏற்கத்தக்கதுதானா?

“எது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் ராணுவம், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. தாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும். ஒரு தேசத்தின் மீது பற்றுகொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. அதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை!”
Interview with “Ananda vikadan”.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.