Filed Under:  நல்லூர்

தென்காசியில் 5ம் தேதி வாடகை கார்கள் ஸ்டிரைக்

2nd July 2010   ·   0 Comments

தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 5ம் தேதி வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.தென்காசி வாடகை கார் டிரைவர்கள் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வரும் 5ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

Tags:  , , ,

By

Readers Comments (0)


Comments are closed.