பெண்ணடிமை !
14th February 2012 · 0 Comments
பெண்ணடிமை !
பெண்கள் நாட்டின் கண்களென்றான் பாரதி
புண்கள்தான் அவர்களின் கண்களென்றான் ஆடவன் !
அடிமைப் படுத்தினான் பெண்மகளிரை
ஆனந்தப்பட்டான் ஆடவன் !
பிச்சையெனும் வரதட்சணையை வாங்கிப்
பேழையில் பூட்டிப் பார்த்தாய் இன்பமாக – அது
பணமெனும் பிணமடா !
பேதையெனும் சுதந்திர அன்னத்தைப் பெற்றுக்
கூட்டுக்குளடைத்து அடிமைப்படுத்துகிறாயே – அது
பாசம் காட்டும் தாய்மையடா !
பெண்ணடிமை என்பது வேண்டாமடா – நம்
பிறப்பினை நினைத்து உணர்வோமடா !
அடிமைப்படுத்தும் ஆடவரே,
அவளில்லையேல் – நீ
அடங்கிக்கிடப்பாய் வீதியிலே!
படுத்தாதே பெண்களை அடிமையாய்த்
தடுக்காதே பெண்களின் உரிமையை!
வேண்டாமடா பெண்ணடிமை – அவர்க்குக்
கொடுப்போமடா முன்னுரிமை !………………….
நன்றி : “கவி ராகம்”
-சிந்தனை,
க.கா.செ.
ரியாத்
தொடர்புடைய செய்திகள்
- கடையநல்லூரின் எழில்மிகு ஊராணி!-செங்கோட்டையன்
- பெற்ற தாயை போற்றுவோம்-சேயன் இப்ராஹீம் அபுதாபி
- தாரு சுத்தி பாவோடும் ராட்டு போனதெங்கே…-செங்கோட்டையன்
By yousuf
Readers Comments (0)
Comments are closed.


