முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிடிவாரண்டு
19th February 2012 · 0 Comments
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிடிவாரண்டு
முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.அசாருதீன் மீது காசோலை மோசடி செய்த வழக்கு நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்திற்கு அவர் வரும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் அசாருதீன் இருப்பதால் அவரால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என அவருடைய வழக்குரைஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி விக்ராந்த்வைத் அவர் நீதிமன்றத்திற்கு வராததால் பிணையில் வெளியில் வரமுடியாத கைது ஆணையை பிறப்பித்துள்ளார். அசாருதீனைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
க.கா.செ
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்: 5 வீரர்கள் சஸ்பெண்ட்
- “சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பியது பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!
- ஆ.ராசாவுக்கு ஜாமீன்… திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார்!
Readers Comments (0)
Comments are closed.


