Filed Under:  தமிழ் நாடு

மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி

30th June 2011   ·   0 Comments

டெல்லி: திஹார் சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதுள்ளார் கனிமொழி. அவருக்கு ஆறுதல் கூறி பேசினார் ஸ்டாலின்.

2வது முறையாக நேற்று கனிமொழியை சந்தித்தார் ஸ்டாலின். நேற்று மாலை 4 மணிக்கு சிறையில் கனிமொழியை அவர் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக சிறையின் உதவி கண்காணிப்பாளர் அறைக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு அண்ணனைப் பார்த்த கனிமொழி உடனே உடைந்து போய் அழுது விட்டார்.

அவரை சமாதானப்படுத்திய ஸ்டாலின் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் ஸ்டாலின் பேச அதை அமைதியாக கேட்டபடி இருந்தார் கனிமொழி. பின்னர் மனதை தேற்றிக் கொண்டு அவரும் பேசினார். இருவரும் தமிழில் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழியை சந்தித்துப் பேசிய பின்னர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.