Filed Under:  வளைகுடா

3500 ஆண்டுகள் பழைய நகரம் கண்டு பிடிப்பு

2nd July 2010   ·   0 Comments

3500  ஆண்டுகள் பழைய நகரம் கண்டு பிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் 1664-1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, ஆஸ்திரேலிய  வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள், கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன. ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு 1975ம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly


தொடர்புடைய செய்திகள்

By

Readers Comments (0)


Comments are closed.