கட்டுரைகள்
சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகராத பெண்களின் பட்டியலில் நாம் சேர வேண்டாம்
தொலைக்காட்சி என்ற அழகிய கண்டுபிடிப்பு இன்று அசிங்கப்பட்டு நிற்பதற்குக்காரணம் அதில் வெளிவரும் தகவல்கள் தாம். நாட்டு நடப்புக்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய விளிப்புணர்வுத்தகவல்கள் என்று நல்ல செய்திகள் வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்றுசொல்லுமளவுக்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமுதாய சீர்கேட்டைஉண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு திறைப்படமாவது ஒளி, ஒலிபரப்பாத சேனலேஇருக்க முடியாது. அதே போல் எந்த சேனலில் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள்இல்லையோ அந்த சேனல்களை வீட்டுப் பெண்கள் பார்ப்பதற்கே விரும்புவதில்லை. ஆம் திரைப்படத்தின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கு மூன்று மணிநேரங்கள் வீனடிக்கப்படுகின்றனவென்றால், தொலைக்காட்சித் தொடர்களுக்குநாளும் பல மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டு குடும்பமே அமர்ந்து ரசிக்கும் நிலைஉருவாகியுள்ளது. குடும்பப் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர். இளைஞர்களுக்கான உற்சாகமூட்டும் தொலைக்காட்சித் தொடர் நாடகம். இளம் பெண்களின் எண்ணத்திற்கேற்ற தொடர் கதை. சிறுவர்களை வயப்படுத்தும் தொடர் நாடகம். வயோதிபர்களின் வயதுக்கேற்ற நாடகம். என்று பல வித்தியாசமான விளம்பரங்களுடன் ஒளிபரப்பப்படுகின்றன இன்றையநாடகங்கள். இந்தியா, இலங்கை போன்ற ஆசிய தமிழ் பேசும் மக்களைத் தாண்டி உலகலவில்பல நாடுகளிலும் இந்த தொலைக் காட்சித் தொடர் நாடகங்கள் பிரபலம்பெற்றுள்ளன. தொலைக்காட்சித் தொடர்களும், விபரீதங்களும். தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்காக நேரம் ஒதுக்கி, அவற்றை ரசித்துப்பார்க்கக் கூடிய பெண்கள், மறுமை நாளின் நிகழ்வுகளை மனதில் பதித்துக் கொள்ளவேண்டும். கற்பனையான கதைகள், பொய்யான தகவல்கள், சமூக சீர்கேடுகள், பழிவாங்கள்தந்திரங்கள், கொலை முயற்சிகள், என்று மனிதனை ஒரு கேவலமான ஜீவனாககாட்ட முனையும் இந்த தொடர் நாடகங்களைப் பார்ப்பவர்கள் இறுதியில் அதைதானும் பின்பற்றும் தீய நிலைக்கு செல்வதை கண் கூடாகக் காணக் கிடைக்கிறது. தொலைக்காட்சி நாடகம் பார்த்தேன் அதன் படி கொலை செய்தேன். நாடகத்தில் வந்ததைப் போல் செய்து பார்க்க எண்ணி தூக்கில் தொங்கினான்மரணித்து விட்டான். தொலைக்காட்சித் தொடர் வழியில் எனது கோபத்தை தீர்த்துக் கொண்டேன். தவறு செய்துவிட்டு இப்படியெல்லாம் செய்தி வெளியிடுவதைப் தினமும்காணக்கிடைக்கும். மாமியாரை பழிவாங்குவது எப்படி? மருமகளை அடக்குவது எப்படி? தாயையும், மகனையும் பிரிப்பது எப்படி? சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினையை உண்டாக்குவது எப்படி? போன்றஅனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறது இந்த தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள். உலக வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனும் எப்படி மரணிக்கிறானோ அப்படியே தான் (மறுமையில்)எழுப்பப் படுவான். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) அவா்கள். (நூல் முஸ்லிம் 5126)
More கட்டுரைகள்
திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம்
திருச்சி ஏர் போர்ட்ல நடக்கும் அக்கிரமம் திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் ” பிரிக்க முடியாதது எதுவோ?” என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக ” இந்தியாவும் லஞ்சமும் என்றுதான்
கட்டுரைகள் Archives
தொலைக்காட்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் பெரும்பாலான குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் குழந்தைகளுடன் தமது குழந்தைகளை பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசுவதால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதனைத் தொடர்ந்து உடல் நல பாதிப்பும் ... பெண்ணை காதலிப்பது,… காதலிக்காமல் இருப்பது…. இரண்டும் குற்றமே!
கல்யாணத்திற்கு முன் ஒரு பெண்ணை காதலிப்பது! கல்யாணத்திற்குப்பின் மனைவியை காதலிக்காமல் இருப்பது!இரண்டும் குற்றமே! மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் ... முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமா!
"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல் ஹதீஸ், புகாரி) பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் ... குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!
குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? நம்முடைய இயல்புகளைப் புரிந்து ... குழந்தை பராமரிப்பு!
'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்' என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள். முக்கியமாக, தம் ... பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!
சமீபத்திய ஒரு நிகழ்வு......70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற ... “நாம்” எதை தீர்மானிக்க வேண்டும் ?
பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம். இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை ... நீங்க தவ்ஹீதா… சுன்னத் ஜமாத்தா..?
தவ்ஹீது (ஏகத்துவம்): தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள். அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் ...
Next Page »



