கவிதைகள்

படுத்துறங்க வேற எடமில்ல.!

படுத்துறங்க வேற எடமில்ல.! பேச்சுத்துணைக்கும் யாருமில்ல.! பள்ளிக்கூடம் அனுப்ப அம்மாகிட்ட பணமில்ல.! எப்ப கிடைக்கும் – என் பசிக்கு உணவு தெரியலை.! என் அப்பன்காரன், அம்மாவை விட்டுட்டு போன ஒரு தறுத..! அம்மா எப்ப

Continue Reading »

More கவிதைகள்

வறண்டபூமியும் உலர்ந்துபோன உடலும்…

வானமே உன்னைப் படைத்தவன் உயரத்தில் அல்லவா வைத்திருக்கிறான் உயரத்தில் இருப்பதால் இடியென்ற பெயரில் இருமிக்கொண்டு அலையாதே இருமாப்புக்கொண்டு நீ.. உமிழ்ந்துவிடு உன்னில் அடக்கிக்கொண்ட அடை மழையை கருமேகத்தை கண்ணில்காட்டி மிரட்டுகிறாய் எங்களை காத்திருக்க வைத்துவிட்டு

Continue Reading »

கவிதைகள் Archives

வெளிநாட்டு வாழ்க்கை !
என் நெஞ்சம் அது இன்று புண்ணாச்சி, வெளி நாட்டு வாழ்க்கையெல்லாம் மண்ணாச்சி நித்தம் அதை நினைத்து நினைத்து வெம்புகின்ற மனசே... தூக்கம் இன்றி புறண்டு கண்ணீர் சிந்தும் விழியே நெஞ்சில் வேதனை வாழ்வில் சோதனை சேர்ந்திருக்க எத்தனை வண்டி எத்தனை வேலை போவதும் வருவதும் பிடிக்கவே இல்லை சம்பளம் இல்லை ...
முதியோர் இல்லம்!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம் பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் ...
கவிதை – பாங்கு!
பாங்கு - ஆன்மாவை விழிப்பூட்டும் அற்புதத் தாலாட்டு ! கணந்தோறும் உலகத்தின் காது திறக்கும் சாவி ! காற்றில் கரைந்து உயிரில் நிறையும் இந்த ஒலிதான் மனித மனக் கதவுகளைத் தட்டுகின்ற விரல் ! அல்லாஹ் பெரியவன் அவனே தொழ உரியவன் அவன்தூதர் முஹம்மதென்று அறைந்து பாடும் சங்கீதம் ! தோல்விக் குழிகளுக்குள் துவண்டு கிடப்பவரை வெற்றியின் பக்கம் விரைந்தழைக்கும் அழைப்போசை ! இந்த ஒலிக்கயிறுதான் மனிதர்களைத் தடம் மாறிப் போகாமல் வடம்போட் ...
உங்கள் பொன்னான வாக்கை குப்பைத் தொட்டியில் போடுங்கள் !
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது…   “தேர்தல் பாதை திருடர் பாதை” - என்றவுடன், அப்படியானால் ஓட்டுப்போடும் நானுமா? என உள்ளர்த்தம் புரிந்து கொண்டு கோபப்படும் நண்பா, உள்ளபடியே சொல்! “இனி ...
ஈகைத் திருநாள் வாழ்த்து ஈனுதல் – க.கா.செ.
ஈகைத் திருநாள் வாழ்த்து ஈனுதல் இன்னல் எனும் இருட்டறைக்கு இன்பம் எனும் ஒளியளித்து இம்மண்ணக மானிடர்களை இமய அரணாய்க்காக்கும் இறைவனுக்கே புகழனைத்தும்! மொட்டுச் சிதறல்களை முச்சடைக்கச் செய்து மீட்டுகின்ற வீணைகள் இசையை முழங்குகின்றது! சீர்மைஓவியச் சிற்றிடையாய் செப்புக் கலசங்களாய் செம்பொன் மணியுடன் யாழிசை வெடிக்கின்றது! அடுக்குத் தொகையாய் அன்பின் இலக்கணம் உவமைத் தொகையை விரிவடையச் செய்கின்றது! வெட்டிப்பார்க்கும் நா சுட்டுப் போகுதடி வேலியிட்டும் விருந்தளிக்கும் இயற்கையின் பாசமடி! முட்டிக் களைத்த முதியவரும் முச்சுவாங்கும் மடிமேகம் குட்டிக்கரணம் ...
எங்களை எண்ணிப்பாருங்கள்….!
ரமலான் மாதமிது .... மகிழ்ச்சி பொங்கும் காலமிது...! உலகெங்கும் உற்சாகக்கோலம்... எம்மக்களிடையே மரண ஓலம்...! அறுசுவை உணவு கொண்டு நோன்பு திறக்குது இஸ்லாமிய உலகம்....! மதவெறி தினவு கொண்டு எங்கள்  உயிரை குடிக்குது பர்மிய கலகம்...! சஹர்  நேரத்தில் உண்ண விழிக்குது உலகம்...! அதே நேரத்தில், எங்களை கொன்று ஒழிக்குது  கலகம்...! நோன்பின் தாகத்தால் நாவில் தண்ணீர் வறண்டுவிட்டது உங்களுக்கு...! பகைவனின் கோபத்தால் கண்களில் கண்ணீரும் வறண்டுவிட்டது எங்களுக்கு...! துப்பாக்கி ரவைகள் எங்களை துளையிடுகின்றன ...! பக்கத்து ...
வெளிநாட்டு உத்தியோகம்
“வெளிநாட்டு உத்தியோகம்” தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை இன்று அதையும் பிரியப்பட கற்றுகொண்டேன். “வெளிநாட்டு பயணம் ” இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைபடனுமா ? என்று தத்துவம் பேசிய வசனம் இன்று திரும்பி என்னை நோக்கி… “விமான நிலையம்” பலருக்கு பிடிக்காத இடம் அது தான் – வழியனுப்பும்போது பிடித்த இடமும் ...
ஹிஜாப் தரும் சுதந்திரம்!
என்ன பார்க்கிறாய்? என்னைப் பார்க்கும்போது என்னில் என்ன பார்க்கிறாய்? நான் சுதந்திரப் பறவையா? கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா? இயந்திர உலகில் மாட்டியவளா? கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய் கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ? கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ? நாகரீகம் அறியாதவளாக பிணைக்கப்பட்ட கைதியாக நான் தெரிகிறேனோ உனக்கு? எனக்கென்று சொந்தக் குரல் எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய் வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய் மூடி மறைத்தால் - ...

Next Page »