முடவன் குட்டி பக்கம்
உன் உள்ளே உறைந்திருக்கும் பேரொளி- முடவன் குட்டி.
உன் உள்ளே உறைந்திருக்கும் பேரொளி முடவன் குட்டி. கைதூக்கி விடுவாரென யாசித்து நீண்ட கரத்தில் விரல் அறுத்துச் சென்றனர்- மனிதர் தன்னுடனும் உலகுடனுமான இணக்கம் குலைத்தன- புத்தகங்கள் வாழ்தலின் அர்த்தம் தேடிய அறிவுசார் விசாரணை
More முடவன் குட்டி பக்கம்
கண்ணீரில் எழுதுகிறேன்..-முடவன் குட்டி
கண்ணீரில் எழுதுகிறேன்.. இறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது… யாரையோ தேடுவதாய்
முடவன் குட்டி பக்கம் Archives
குரோதம் (கவிதை ) -முடவன் குட்டி குழந்தையா மறந்து போக..? மன்னித்து விட காந்தி மகானா ..? வெறுப்பின் காளவாய் ஊதி தீக் கங்குகளாய் சொல் வளர்த்தேன் அணையவிடாது காத்தேன் ஓர் நாள் சாவகாசமாய் ஏதோ பேச வந்தாய் சடா - ரென உன் முகத்தில் வீசினேன் கதறித் துடித்தாய் ஆ இவ்வளவு வல்லமை வாய்ந்தனவோ என் சொற்கள்..? பொறுக்கிச் சேர்க்கலானேன் செதுக்கிச் ... பூர்வீகத்து வீடு -முடவன்குட்டி -கவிதை
கரை சேராத் தங்கச்சி அடைபடா கடன் சதா தலையுள் கொதிக்க தறி இழுக்கையிலேயே மூச்சுத் திணறிச்செத்த சின்ன அண்ணன் பீடிப்புகை "உள்ளூட்டில்" கமறும்: 'தனிக்குடித்தனத்துக்கு வெளியூர் அழைச்சுப்போக அவுக வருவாக'-வென காத்திருந்து- ஆற்றாது அக்கா அழுத கண்ணீரின் ஈரம் இன்னும் உலராத "மச்சு".. ' நான் பெத்த மக்களை நல்லாக்கி வை நாயனே...' கண்கலங்க.. உதடு துடிக்க.. வானம் பார்த்துக் கையேந்துவாள்-அம்மா "முற்றத்து" தரையில் அவள் கண்ணீர் சிதறும்: பரம்பொருள் ... வாப்பா.. நான் செஞ்சது தப்பா…. ? முடவன் குட்டி
பெரு விரல் பருமனில் நீளமான கயிறு. தூணோடு நிற்க வைத்து, கைகள் இரண்டையும் பின்னால் வளைத்துக் கட்டி, வயிற்றையும் இரண்டு சுற்று சுற்றிக் கட்டினார் அண்ணன். மீதிக் கயிற்றின் நுனியில், நிதானமாக முடிச்சுப் போட்டார். ' ஒரு முடிச்சுப் போதும்-ணேன். ஒண்ணு ... சாகுமோ எனது ஊர்-முடவன்குட்டி
சட்டக்..... சட்டக்.... சட்டக் ...... தறி நெய்யும் உழைப்பின் இசை காதில் விழவில்லை.... 'பாவு' ஆத்தி நடந்து தளர்ந்த வாப்பாமார் காலடிச்சுவடுகள் கீழே அழுந்தி நெரிபடுவது அறியாமல்.... தெருக்களில் வழுகி வழுகிப் போகின்றன ... 'டாட்டா சுமோக்கள்' ... டிவி..கிரிக்கெட் ராட்சச ஒளிப் பாய்ச்சலில் பார்வை தொலைத்த கபடி... நீச்சல்... விளையாட்டுக்கள் பழைய ஞாபாகங்களில் தமது கண்கள் தேடி அலைகின்றன... தறி ... வந்த வழி- ( சிறு கதை )முழுக் கதை -முடவன் குட்டி
வந்த வழி- ( சிறு கதை )- முடவன் குட்டி ” வேய்.. கலீல் ...வேய்..” – தெருவில் நின்று கத்தினார், காட்டுவா சாயிபு. தறி நெய்வதை நிறுத்தி, காக்குழியில் நின்றவாறே, ஜன்னல் வழியே அவரைப் பார்த்த கலீல் ” வேய் காட்டுவா நான் என்ன செவுட்டுப் ... எழுதிச் செல்லும் விதியின் கை – முடவன் குட்டி
சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது, எங்கேயோ ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதுபோல காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு வர, தூக்கம் வள்ளிசா போயே விட்டது. ... விடுதலை(சிறுகதை) -முடவன் குட்டி
சலூனுக்குப் போய் ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. முடி வெட்டிக் கொள்ள வேண்டும்: மனைவி தினமும் தொண தொணக்கிறாள். ஆபிஸில் ராவ், 'ஏ முண்டம்..இது என்ன ஆபிஸா.. சந்தை மடமா.. ? ஒழுங்கா ஹேர் பண்ணிட்டு லட்சணமா வா.. திருப்பியும் மொட்டைபோட்டுட்டு வந்தியோ ... இருபத்தியோராம் நூற்றாண்டில் இன்னுமொரு பெண் ( கவிதை- முடவன்குட்டி )
இருட்குவியலாய் கக்கூசில் விழுந்து கிடப்பான் புருஷன்- இன்னும் தெளியாத குடிபோதையில். அவனை அள்ளி குளியறை போகையில் "குழம்பா இது..தூ.." எங்கோ பார்த்து காறித் துப்புவான் நாலாவது முறையாய் எஸ் எஸ் எல் சி எழுதிய கொழுந்தன். "உடுத்தி.... மினுக்கி ..ஆபீஸ் போறாளோ.. வேற எங்காச்சும் போறாளோ.."- வீட்டோடு இருக்கும் நாத்தனார் வெறுப்பு உமிழ்வாள். சன்னல் கம்பிகளூடே -பூட்டிய அறைக்குள் எட்டிப்பார்ப்பாள்-குழந்தையை: "பளா"-ரென சன்னல் கதவை அறைந்து ...
Next Page »

